மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

2] என் நண்பர்களைப்பற்றி


முதலில் என் நண்பன் கதிர்வேலைப்பற்றி
பெயர் : கதிர்வேல்

இவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம் உதாரணத்திற்கு ஒரு குழந்தை பிறந்த உடன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவரின் பேச்சு இருக்கும். [இளங்கன்று  பயம் அறியாது அதுபோல் தான் இவர் ]
இவர் பணத்தினால் ஏழை ஆனால் மனத்தினாலும் ,குணத்தினாலும் பெரிய பணக்காரர்.
இவர் இப்போது பொறியியல் படித்து வருகிறார் [கணினித்துறை]
இவர் கணினித்துறையில் மிகவும் வல்லமை படைத்தவர்
இவருக்கு லினக்ஸ் என்றால் உயிர் [linux operating system]
முக்கியமாக எனக்கு கணினியைப்பற்றி கற்றுத்தந்தவர் இவர்தான்.

இவரின் blogspot :www.gnutamil.blogspot.com

அடுத்த நண்பர் ரமேஷ்
பெயர் : ரமேஷ்

இவர் தான் என் உயிர் . ஆகையால் என்னைப்பற்றி நான் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை .

அடுத்த நண்பர் மணிகண்டன்
பெயர் : மணிகண்டன்[கபடி வீரர் ]

இவரை செல்லமாக மணி என்றுதான்  அழைப்போம் .
இவருக்கு ஒரு பட்டபெயர் உள்ளது அது micro processor.
எப்படி மைக்ரோப்ராசசர் ic யில் 40 பின்கள் துல்லியமாக வேலை செய்கிறதோ அதைப்போல் தான் இவர் .
இவர் செய்யும் வேலைகள் அனைத்தும் துல்லியமாக அழகாகன முறையில் இருக்கும்
இதற்க்கு உதாரணம் இவரின் blogspot ஆகும் .

இவரின் blogspot :www.kaniniariviyal.blogspot.கம

அடுத்து எங்களுக்கெல்லாம் குறு இவர்தான்
பெயர் : சக்திவேங்கடேசன்

நாங்கள் அனைவரும் மரியாதையாக பார்க்கும் மனிதர்.
மற்றவர்களை ஊக்குவிக்கும்  மனம்படைத்தவ்ர்.
இவர் ஒரு கைப்பந்து வீரர் .

நாங்கள் அனைவருமே பொறியியல் படித்துவருகிறோம் ஆகையால் உங்களுக்கு  கணினி சம்மந்தமாகவோ , மின்னியல்  தொடர்பாகவோ எந்தவிதமான கேள்வி வேண்டுமானாலும் எங்களிடம் கேட்கலாம்.

உங்கள் அன்புச்செல்வன் 
ம.பாண்டியராஜன்

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.