மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

வெட் பேட்டரி



கார், பஸ், லாரி, ஸ்கூட்டர் முதலியவற்றில் வெட் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரிகளில் ஒரு செல்லுக்கு 2 ஓல்ட் வீதம் கிடைக்கிறது. 3 செல் பேட்டரி 6 செல் பேட்டரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 3 செல் பேட்டரியில் 6 ஓல்ட்டும் 6செல் பேட்டரியில் 12 ஓல்ட்டும் DC மின்சாரம் கிடைக்கிறது.

இந்த பேட்டரிகளில் நீர்த்த கந்தக அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இதில் இந்த அமிலம் ஊற்றுவதற்காக தனிதனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
ஸ்கூட்டரில் உள்ள பேட்டரிகள் சிறிதாக இருந்தாலும் அதன் ஓல்ட் அளவு ஒன்றுதான். லாரி, பஸ், போன்ற பெரிய வாகனங்களில் 24 ஓல்ட் மின்சாரம் தேவைப்படுவதால் இரண்டு 12 ஓல்ட் பேட்டரிகளை சீரிஸில் இணைத்து மின்சாரத்தை எடுப்பார்கள்.

இந்த பேட்டரிகளில் ஆம்பியர் மிகவும் அதிகம். ஆகவே இதன் இணைப்பு பகுதிகளில் உலோக பொருள்கள் எதையும் வைக்க கூடாது. அப்படி வைத்தால் நெருப்பு உண்டாவதுடன் பேட்டரியும் வீக்காகும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.